Friday 3rd of May 2024 02:40:09 PM GMT

LANGUAGE - TAMIL
-
மின்தடை விவகாரம் - முடங்கியது ஏ9 வீதி!

மின்தடை விவகாரம் - முடங்கியது ஏ9 வீதி!


மின்தடையை எதிர்த்து யாழ்ப்பாணம் செம்மணி வளைவில் ஏ 9 வீதியை வழிமறித்து போராட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தற்பொழுது நாட்டில் பரவலாக பல மணிநேர மின்சாரத்தடை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் மக்களின் பாதிப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த போராட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டது.

இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான எஸ்.சுகிர்தன் மற்றும் கே.சயந்தன், யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE